Monday 12 August 2013

தெய்வமாய் என்னுள் வாழும் என் அப்பா...

அப்பா இம்மண்ணுலகை விட்டு
நீங்கள் இறைவணடி சேர்நது
இந்த வருடத்தோடு 23 ஆண்டுகளாகிவிட்டது
இன்றும் என் நினைவில் நீங்காமல் நீங்கள்
தெய்வமாய் என்னுள் வாழ்கிறிர்கள்...

1970...80ம் ஆண்டுகளில்
நீங்கள் பினாங்கில் மஇகா சுங்கை நிபோங் கிளைத்
தலைவராக பதவி வகித்து வந்ததையும்..
அதே காலக்கட்டத்தில் - நீங்கள்
சுங்கை நிபோங் வீர காளியம்மன் ஆலயத் தலைவராக
பதவி வகித்து மக்களுக்கும், சமுதாயத்தற்கும்
நீங்கள் ஆற்றிய சேவையை மறக்கமுடியாது அப்பா

குடும்பத்தை விட.. சமுதாயத்திற்காக
உங்கள் வாழ்நாளை அர்பணித்த சமுகவாதி நீங்கள்
அப்பா நீங்கள் என் வழிக்காட்டி இன்றும்......
இன்று என் பெயர் பின்னால் `வேலாயுதம்`
என்று என்னுள் சக்தியாய் வாழ்கிறிர்கள்...அப்பா


ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான்
என்பது பெருமையல்ல......
விழுந்த போதேல்லாம் எழுந்தான்
என்பதுதான் பெருமை..... என்று
அப்பா நீங்கள் எனக்கு கூறிய அந்த
வார்த்தையோடுதான் என் பயணம்
தொடர்கிறது.... நன்றி அப்பா